Sunday, May 6, 2012

மூன்றாவது உலகப் போரின் விளிம்பில் உலக நாடுகள்


ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளது.ஆதரவு மற்றும் எதிரான நாடுகள் இலங்கை தீர்மானத்தின் அடிப்படையிலானவை என்று நினைக்க வேண்டாம்.இப்படி உலக நாடுகள் இரு தரப்பாக பிரிந்து நிற்பதற்க்கு காரணம் இலங்கைத் தமிழ்ர் பிரச்சினையையும் தாண்டிய உலகளாவிய பிரச்சினை

இந்த உலகளாவிய பிரச்சினை:அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடக்கும் பனிப்போர்.இதன் உச்சகட்டம் 3வது உலகப்போர் அல்லது உலகின் பல பகுதிகளில் சிறு சிறு போர்கள்.
                                                      ----------------
1922ல் ரஷ்யா தலைமையில் சோவியத் யூனியன் உருவாகிய போது உலக நாடுகள் இரு அணிகளாய் பிரியத் துவங்கின.சோவியத் யூனியன் தலைமையில் ஒரு அணி,அமெரிக்கா தலைமையில் இன்னொரு அணி.1991ல் சோவியத் யூனியன் பல நாடுகளாக சிதறியதால் அதன் பொருளாதார,அரசியல் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.இந்த நேரத்தில் அமெரிக்காவின் தலைமையிலான அணி விரிவடைந்து,அமெரிக்காவின் சர்வதேச அரசியல் பொருளாதார முக்கியத்துவம் அதிகரித்தது.சோவியத் யூனியன் சிதறியதால் உலக அரசியலில் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப சீனா அசுர வேகத்தில் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பல முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தது.சீனாவின் இந்த பாய்ச்சலை உன்னிப்பாக கவனித்த அமெரிக்கா நெருக்கம்,ஒதுங்கல்,எதிர்ப்பு என மூன்று விதமான அணுகுமுறைகளைப் பயன்படுத்தி சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கக் கூட்டணி நாடுகள் முயன்று வருகின்றன.
சுருங்கச் சொன்னால் அமெரிக்கா உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைத் தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறது.சீனா உலகின் நம்பர் 1 நாடு என்ற அந்தஸ்தைக் கைப்பற்றப் போராடிக் கொண்டிருக்கிறது.இந்த போராட்டங்கள் தான் இந்த இருநாடுகள் இடையில் நடந்து வரும் பனிப்போரின் பின்னனி.இந்த போராட்டங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல நாடுகளில் சாதகங்களையும் பாதகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

ஆசிய நாடுகள்:இந்தியா,இலங்கை,சீனா



இலங்கையில் தமிழீன படுகொலைப் படுகொலையை நடத்திய ராஜபக்ஷேவின் அரசுக்கு இந்த துணிச்சல் வந்தது எப்படி?எல்லாமே சீனாவின் பக்கப்பலம்தான்.
இலங்கையுடன் சீனா இந்த திடீர் நெருக்கத்தை வளர்த்தது ஏன்?

முதல் காரணம்:சீனாவைப் போல் இந்தியா மிகப்பெரிய நாடு.ஆசிய அரசியலில் சீனாவின் ஏகாபத்தியம் ஏற்படுவத்ற்கு இந்தியா ஒரு தடைக்கல்லாக இருந்து வருகிறது.

இரண்டாவது காரணம்:அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கமாக இருந்து வருகிறது.அணிசேரா நாடுகள் அமைப்பில் இந்தியாவுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருந்து வருகிறது.(அணிசேரா நாடுகள் என்பது சோவியத் யூனியன் உருவாகியபோது ரஷ்யா மற்றும் அமெரிக்காவைச் சாராத நாடுகள் உருவாக்கிய அமைப்பு தான் அணிசேரா நாடுகள்).இது சீனாவின் 'உலகின் நம்பர் 1 நாடு' என்ற லட்சியத்தை நிறைவேற்றத் தடைக்கல்லாக இருக்கிறது.
இந்த தடைக்கல்லை உடைக்க வேண்டுமானால்,இந்தியாவை சர்வதேச அரசியலில் கவனம் செலுத்தாத வகையில் அதன் உள்நாட்டு விவகாரங்களிலே திணறடிக்க வேண்டும் என்பது சீனாவின் ராஜதந்திரம்.



இதற்காக,
வங்கதேசம்,மியான்மர்,நேபாளம்,பாகிஸ்தான் என இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுடன் சீனா நெருக்கத்தை வளர்த்துக் கொண்டது.இதன்மூலம் நிலப்பகுதியில் இந்தியாவைச் சுற்றி சீனா 'செக்' வைத்துள்ளது.
இதுபோல் கடல்பகுதியில் 'செக்' வைக்க முடியாமல் சீனா திணறி வந்தது.கடல்பகுதியில் 'செக்' வைக்க வேண்டுமாயின் இந்தியப் பெருங்கடலில் உள்ள இலங்கை மற்றும் மாலத்தீவுடன் சீனா நெருங்கியாக வேண்டும்.இதற்கான ராஜதந்திரத் திட்டத்தின் முதல்கட்டமாகத் தான் இலங்கையுடன் சீனா நெருங்கியது.
'புலிகளின் ஆட்சியை ஒடுக்க உதவுகிறோம்.இலங்கையின் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவுகிறோம்.அதற்குப் பதிலாக,இலங்கையின் அம்பந்தோட்டாத் துறைமுகத்தை நாங்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்'என ராஜபக்சே அரசுடன் சீனா பேசி முடித்தது.
'சீனாவுடன் நெருங்க வேண்டாம்,புலிகளுடன் சமரச தீர்வு ஏற்படுத்த நாங்கள் உதவுகிறோம்'என இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியிருக்க வேண்டும்.ஆனால் இந்த அணுகுமுறை மத்திய அரசிடம் இல்லாமல் போனது இனப்படுகொலைக்கு காரணமாக மாறியதோடு,இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது.
சரியான அணுகுமுறைக்குப் பதிலாக'புலிகளை ஒழிக்க நாங்களும் உதவுகிறோம்' என மத்திய அரசு பின்பற்றியது இலங்கை அரசுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்தது.சீனாவுடன் நெருங்கி விடுவோம் என்ற பயத்தை உருவாக்கி தனது இனப்படுகொலையை நிறைவேற்றியது இலங்கை அரசு.இந்தியாவும் இலங்கைப் பக்கம் நின்றதால் அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ் போன்ற நாடுகளால் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.போர் முடிந்தபின் இந்தியாவுக்கு இலங்கை 'டாட்டா' காட்டிவிட்டு மீண்டும் சீனாவுடன் நெருக்கமாகி விட்டது.இலங்கையின் கடலோரப் பகுதிகள் சீனாவின் கடற்படைத்தளங்கள் போல் மாறி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.இதேபோல் கடல்பகுதியில் அடுத்த 'செக்' நடவடிக்கையும் சீனா சமீபத்தில் நிறைவேற்றியது.
இந்தியாவின் மிகப்பெரிய நட்புநாடாக,இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு இருந்து வந்தது.சீனா இந்த நாட்டையும் வளைத்து விட்டது.சமீபத்தில் அங்கு ஏற்பட்ட புரட்சியில் அதிபர் நசீத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு,துணை அதிபராக இருந்த வாகித் புதிய அதிபராக பொறுப்பேற்றார்.இந்த புரட்சியின் பின்னனியில் இருந்தது சீனாதான்.இப்படி நீரிலும் நிலத்திலும் ராஜதந்திர வலையால் இந்தியாவை சீனா சுற்றி வளைத்துவிட்டது.இந்த வலையை அறுத்தெடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது.

சீனாவுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டணிகளின் முயற்சி:



-->சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் மியான்மரை,அமெரிக்கக் கூட்டணி நாடுகள் மெல்ல மெல்ல வளைத்து வருகின்றன.அங்கு இராணுவ ஆட்சி இருந்தது.கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்த மியான்மர் அரசிடம்,ஜனநாயக ஆட்சியை அமல்படுத்தினால் பொருளாதார நிதியுதவி தாரளமாக வழங்கப்படும் என அமெரிக்க கூட்டணி நாடுகள் கூறியுள்ளன.இதை அந்நாட்டு அரசும் ஏற்று பாதி ஜனநாயக அரசை ஏற்படுத்தியுள்ளது.தற்போது ஆங்க் சாங்க் சூ கியும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் நெருக்கம் காட்டுவது சீனாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-->சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் அமெரிக்கா தனது கடற்படை தளத்தை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டது.இது சீனாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் கோக்கோஸ் தீவிலிருந்து எளிதாக சீனா உரிமைக்கோரி வரும் எண்ணெய் வளமிக்க தென்சீனக் கடலை எளிதாக கண்காணிக்க முடியும்.ஏற்கனவே தென்சீனக்கடலின் தீவுகள் பலவற்றுக்கு உரிமைக்காக பிலிப்பைன்ஸ்,மலேசியா,வியட்னாம் என தனது அண்டை நாடுகள் பலவற்றுடன் சீனா முரண்பட்டு நிற்கிறது.தற்போது அமெரிக்காவும் தன் பங்குக்கு த்னது படைகளை ஆஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் நிறுத்தியுள்ளது.வளைகுடா நாடுகளிலிருந்து சீனாவுக்கு எண்ணெய் எரிபொருள்கள் கொண்டு வரப்படும் மிக முக்கியமான மலாக்கா நீரிணையை எளிதாக கோக்கோஸ் தீவிலிருந்து கண்காணிக்க முடியும்.எதிர்காலத்தில் இந்தியா-சீனா அல்லது அமெரிக்கா-சீனா இடையே போர் அல்லது ஒரு பதற்ற நிலை உருவானால் மலாக்கா நீரிணையை போர்க்கப்பல்கள் வழிமறித்தாலே சீனாவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் வகையில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்தது.
-->பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்க அமெரிக்கா மறைமுகமாக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.மேலும் அமெரிக்கா இந்திய பெருங்கடலில் அனைத்து பகுதிகளையும் சீனாவுக்கு எதிராக தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு வருகிறது.எனவே சீனா பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்தி பலுசிஸ்தானின் கவ்தார் துறைமுகத்திலிருந்து வளைகுடா நாடுகளின் எண்ணெய் பொருட்களை தொடர்வண்டி மூலமாகக் சீனாவுக்கு கொண்டு செல்ல இரகசியமாக பணிகளை மேற்கொண்டு அடுத்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தவும் முனைந்துள்ளது.இதனால்தான் அமெரிக்கா பலுசிஸ்தானை தனி நாடாக்கி ஐ.நா சபையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வர முயல்கிறது.இதன்மூலம் பாகிஸ்தானை அதன் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் திருப்பி விடவும் செய்துள்ளது.
-->இந்தியா எதிராக சீனா செயல்படுவதால் அமெரிக்காவுடன் இந்தியா கைக்கோர்த்துள்ளது.இந்தியாவின் இந்த நெருக்கம் சீனாவை அமெரிக்காவிற்க்கு எதிரான விவகாரங்களில் விலகியே நிற்க வைக்கிறது.

சர்வதேச அரங்கில்...



சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெறுவதற்காக ஆப்ரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறது.ஆப்ரிக்க நாடுகளுடன் வைரச்சுரங்க ஒப்பந்தம்,தாதுச்சுரங்க ஒப்பந்தங்களைச் செய்த சீனா வளைகுடா நாடுகளுடன் எண்ணெய் இறக்குமதி மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியையும் செய்து கொண்டுள்ளது.இதோடு ஆப்ரிக்க நாடுகள் தங்கள் சர்வதிகார ஆட்சியை தொடர ஆயுதங்கள் மற்றும் போர்ப்பயிற்ச்சிகளையும் வழங்கி வருகிறது.சீனாவின் இந்த இராஜதந்திர நடவடிக்கைகளை அமெரிக்கக் கூட்டணி நாடுகள் இராஜதந்திர நடவடிக்கைகளால் முறியடித்து வருகிறது.

சமீபத்தில்,துனிஷியா,லிபியா,எகிப்து ஆகிய நாடுகளில் மக்கள் புரட்சியால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது.சிரியாவிலும் புரட்சி உச்சக் கட்டமாகியுள்ளது.வடகொரியாவுடன் சீனாவும் ரஷ்யாவும் நெருக்கமாக இருந்து வருகின்றன.வடகொரியாவில் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாட்டை நீக்க உதவுவதாகவும்,அதற்கு பதிலாக தென்கொரியாவுடன் மோதல் போக்கைக் கைவிட வேண்டும்,அணுஆயுதப் போட்டியை கைவிட வேண்டும் என அமெரிக்க கூட்டணி நாடுகள் கூறியதை வடகொரியா ஏற்றுக் கொண்டுள்ளது.

தைவான் மற்றும் ஜப்பானுடன் சீனாவுக்கு பரம்பரை பகையுள்ளது.இந்த இரு நாடுகளும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுடன் வேகமாக நெருக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.வியட்னாமுடன் ஒருகாலத்தில் நட்பாக இருந்த சீனா,தென்சீனக் கடல்ப்பகுதி உரிமையில் மோதல் போக்கைத் தொடங்கியுள்ளது.இந்த விவகாரத்தில் வியட்னாமை அமெரிக்கக் கூட்டணி நாடுகள் ஆதரித்து வருகின்றன.
-----------------------
முடிவாக.....



அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் அதிரடி நடவடிக்கைகளால் பல பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக முதலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தால் ,இலங்கைத் தமிழருக்கான மறுவாழ்வு நடவடிக்கையும்,இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதையும் தடுக்கும் நடவடிக்கையும் மிக வேகமாக செயல்படுத்த அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கும்.ஒருவேளை திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டிருந்தால்,அதை செயல்படுத்த இலங்கையும்,சீனாவும் முரண்டு பிடித்திருக்கும்.அதன் விளைவாக ஐ.நா. சபை அனுமதியுடன் அமெரிக்கக் கூட்ட்டணி நாடுகள் அதிரடி நடவடிக்கையில் பாய்ந்திருக்கும்.
இந்தியாவின் திருத்தத்தால் அமெரிக்கா இந்த தீர்மானத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது.ஐ.நா சபையின் இலங்கைத் தமிழருக்கான மறுவாழ்வு நடவடிக்கையில் எங்கள் அனுமதி பெற்றாக வேண்டும் என இலங்கை முரண்டு பிடிக்கும்.சீனாவும் அதை ஆதரிக்கும்.இந்த இழுபறி எத்தனை காலத்துக்கு தொடரும் என சொல்ல முடியாது.அமெரிக்காவும் இன்னொரு தீர்மானத்தின் மூலம் சீனாவுக்கும்,இலங்கைக்கும் 'செக்' வைக்கலாம்.
இந்த அதிரடி 'செக்' நடவடிக்கையால் உலகின் பல பகுதிகளிலும் அமெரிக்கக் கூட்டணி நாடுகளுக்கும்,சீனாவுக்கும் சிறுசிறுப் போர் வெடிக்கலாம்.இந்த சிறுசிறுப் போர்கள் வளர்ந்தால்,3வது உலகப் போரே வெடிக்கலாம்.2வது உலகப் போருக்கு முன்பு இருந்த அதே பதட்டச்சூழல் இப்போதும் தொடங்கியுள்ளது.அன்று ஜெர்மனியின் மேலாதிக்க ஆசை,இன்று சீனாவின் மேலாதிக்க ஆசை என்பது மட்டுமே வித்தியாசம்.2வது உலகப் போரின் விளைவாக,காலணி ஆதிக்க ஆட்சிகளில் இருந்து விடுதலைப் பெற்று பாகிஸ்தான்,இந்தியா என பல புதிய நாடுகள் பிறந்தன.இப்போதைய பதட்டச் சூழல் உச்சக்கட்டத்தை எட்டினால்,பல புதிய நாடுகள்  பிறக்கலாம்.ஒரு வேளைப் போர் உண்டானால் இந்தியா,அமெரிக்காவிற்க்கு எதிராக சீனா கண்டிப்பாக நிற்கும்.அத்துடன் இந்தியாவிற்க்கு தானும் ஒரு உலகசக்தி என்பதை நிருபிக்க சரியான தருணமாக அமையும்.எது எவ்வாறாயினும் போர் உண்டானால் அரசியல்,பொருளாதாரம் என அதன் பாதிப்பு கண்டிப்பாக இந்தியாவிற்க்கு மிகப்பெரிய அளவில் இருக்கும்.



                                                                                           by
                                                                                                    
                                                                                        VELS