ரஷ்யாவின் வேண்டுகோளை ஏற்று இரசாயன ஆயுதங்களை சர்வதேச நாடுகளின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும் மற்றும் அவற்றை அழிக்கவும் சிரியா ஒப்புக்கொண்டுள்ளது.ஆனால் இராணுவ தாக்குதல் நடத்தினால் எங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வோம் என்று சிரியா எச்சரித்துள்ளது.சிரியாவின் மீது தீவிர இராணுவ தாக்குதலில் ஈடுபட தயாராக இருந்த அமெரிக்காவும் தனது முடிவை மாற்றியுள்ளது.
சிரியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்யுமானால் அந்நாட்டின் மீதான இராணுவ தாக்குதலை கைவிடுவதாக ஒபாமா கூறியுள்ளார்.மேலும் இராணுவ தாக்குதல் நடத்த நடவடிக்கை மும்முரமாக இறங்கியிருக்காவிட்டால் சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் சிரியா இரசாயன ஆயுதங்களைக் கொண்டு வந்திருக்காது என்றும் கூறினார்.இந்த திடீர் அறிவிப்புக்கு மக்களின் போதிய ஆதரவின்மையே காரணம் என்று கூறப்படுகிறது.மேலும் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கைக்கு வெறும் 25 சதவீதத்திற்க்கும் குறைவான மக்களே ஆதரவு தெரிவித்தனர்.இதனால் ஒபாமாவும் சிரியாவிற்க்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு நடத்த முடியாமல் பின்வாங்கிவிட்டார்.
இந்த சிரிய தாக்குதலின் பின்னால் அமெரிக்கா மிகப்பெரிய சதித்திட்டங்களை ரஷ்யா மற்றும் ஈரான் எதிராக வகுத்திருந்தது.மத்திய கிழக்கு நாடுகளில் சிரியாவில் மட்டும் தனது இராணுவ தளத்தை வைத்திருந்தது.சிரியாவைத் தாக்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து முழுவதுமாக ரஷ்யாவை வெளியேற்றிவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தது.எப்படியும் இதை ரஷ்யா எதிர்க்கும் என்று தெரிந்தே அமெரிக்கா சவுதி அரேபியா மூலம் ரஷ்யாவிற்க்கு தங்கள் இராணுவ தளங்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கவும் தொடர்ந்து செயலாற்றவும் உறுதுணையாக இருப்பதாக தூது அனுப்பியது.இதைத் தொடர்ந்துதான் ரஷ்யா முழுவீச்சில் இவ்விவகாரத்தில் தலையிட ஆரம்பித்தது.ஒருவேளை சிரியாவை அமெரிக்கா கைப்பற்றினால் அதன் மூலம் ஈரானுக்கு நெருக்கடிக் கொடுக்க தீர்மானித்திருந்தது. ஈரானும் பாகிஸ்தான்,சீனா,ரஷ்யா என்று தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டது.இதனால் நிலரீதியாக ஈரானைத் தாக்க சிரியா வழியாக மட்டுமே வாய்ப்பிருந்ததால் சிரியாவை தாக்க அமெரிக்கா திட்டம் தீட்டியது.இதற்க்கு "One Attack and Two Target"என்று பெயரிட்டிருந்தது."One Attcak" என்பது சிரியாவையும்,"Two Target" என்பது ரஷ்யா மற்றும் ஈரானையும் குறிக்கிறது.இராணுவ ரீதியாக ரஷ்யா கடும் சவால் விடுத்ததும்,மக்களின் ஆதரவு போதிய அளவில் கிடைக்காததும் ஒபாமா இந்த முடிவில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஈராக் படையெடுப்பை நியாப்படுத்த கூறப்பட்ட பொய்களைப் போலவே,சிரியாவின் எதிரான போரை நியாப்படுத்த ஆதாரமற்றக் குற்றச் சாட்டாடுகளையும்,பொய்ப்பிரச்சராங்களையும் மக்களிடையே வழங்கினார்.இருந்தபோதிலும் போதிய ஆதரவை மக்களிடமிருந்து ஒபாமாவால் பெற முடியவில்லை.இராணுவ நடவடிக்கைக்கும் எதிர்ப்பு,மக்களின் ஆதரவின்மை போன்றவற்றால் ஒபாமா மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டினார்.சிரிய விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்க்காக அமெரிக்க மற்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.இறுதியில் சிரியாவின் இரசாயன ஆயுதங்கள் சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக தீர்மானிக்கப்பட்டது.இதற்க்குப்பின் தான் இப்பகுதியில் ஏற்பட்ட போர்பதட்டம் தணிந்தது.இருப்பினும் காலவரையற்ற நிபந்தனையை சிரியா கோரியுள்ளதால் அமெரிக்கா இன்னும் தனக்கு போருக்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறது.ஐ.நா சபையும் தனது அறிக்கையில் சிரிய அரசு தரப்பும்,போராட்டக்காரர்களும் ஆயுத தாக்குதலில் ஈடுபட்டதாக சமர்ப்பித்தது அமெரிக்காவிற்க்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.இருந்தாலும் சிரியாவின் மீது கண்ணோட்டத்துடன் தனது அடுத்த இலக்கை மத்திய கிழக்கு நாடுகளில் தேடுகின்றது அது அரபு நாடுகளாகக் கூட இருக்கலாம்.