Wednesday, December 17, 2014

புதினின் இந்திய வருகையும்,அமெரிக்காவின் எதிர்ப்பும்,பங்குச்சந்தையின் சரிவும்-ஓர் அலசல்

புதினின் இந்திய வருகை:

கடந்த டிசம்பர் 10-ந் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு இருநாள் பயணமாக வந்தார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் இருநாடுகளும் பாதுகாப்புத்துறை,பொருளாதாரம்,அணுசக்தி,இயற்கை எரிவாயு  ஆகியவற்றில் முக்கியமான 20 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய புதின் "வாஜ்பாய் காலத்தில் இருந்தே மோடியை எனக்கு தெரியும்.இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா எப்போதும் முன்னுரிமை கொடுக்கும்.மேலும் இந்தியாவுடன் அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த ரஷ்யா விரும்புகிறது" என்று தெர்வித்தார்.மோடி பேசுகையில் "பல இக்கட்டான சூழ்நிலைகளில் ரஷ்யா இந்தியாவிற்க்கு உதவியுள்ளது.கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புத்துறையில் சிறந்த நட்புநாடாக ரஷ்யா விளங்குகிறது.இந்தியா ரஷ்யா இடையே நட்புறவு சிறப்பாக இருக்கிறது.ரஷ்யாவுடனான வெளியுறவுக் கொள்கை எந்த சூழ்நிலையிலும் மாறாது" என்று தெரிவித்தார்.மேலும் ரஷ்யா அதிபர் புதினுடன் கிரிமீயா பிரதமர் செர்ஜி அக்ஸ்யோனோவும் இந்தியா வந்தார்.மேலும் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களிலும் கிரிமீய பிரதமர் கையெழுத்திட்டார்.

 

அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளின் மறைமுக எதிர்ப்பும்:

 கிரிமீயாவை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்ததை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகக் கடுமையாக எதிர்த்ததுடன் ரஷ்யாவுக்கு பொருளாதார தடைகளையும் விதித்தனர்.மேலும் கிரிமீயா மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டுமென அமெரிக்காவும்,ஐரோப்பிய யூனியனும் கேட்டுக் கொண்டன.இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் புதினுடன் கிரிமீய பிரதமரும் இந்தியா வந்தார்.கிரிமீயா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.இதன் மூலம் கிரிமீயா ரஷ்யாவுடன் இணைந்ததை இந்தியா அங்கீகரிப்பதாகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் கருதின.கிரிமீயாவுடனான வர்த்தக உறவிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்தன.மேலும் ரஷ்யாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்க்கு பெரிய கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.ஏற்கனவே அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.அதாவது இந்தியாவின் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளும் அமெரிக்காவின் கண்காணிப்பில் தான் நடக்கும் என்பதாகும்.இதன்மூலம் இந்தியாவின் அணுஆயுத நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது அமெரிக்காவின் எண்ண்ம்.ஆனால் தற்போது ரஷ்யாவுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் கண்காணிப்பிற்க்கு கருப்பு புள்ளி வைத்துள்ளது.இதனால் அமெரிக்கா மிகக் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறது.இருப்பினும் சீனாவை எதிர்க்க ஆசியாவில் இந்தியா தேவை என்பதால் வெளிக்காட்டி கொள்ளாமல் பொருமிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

பங்குச்சந்தையின் சரிவு:

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக உள்ளது என்றும்,இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் மற்றும் உலக வங்கி தெரிவித்தன.இதனால் அந்நிய முதலீட்டாளர்கள் மிக அதிக அளவில் இந்தியாவில் முதலீடு செய்தனர்.அதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தை தன்னுடைய வரலாற்றில் மிக அதிகமாக 28,00 புள்ளிக்கும் அதிகமாகப் பெற்று உலகின் முதல் பத்து பெரிய பங்குச்சந்தை என்ற அந்தஸ்தைப் பெற்றது.ஆனால் புதினின் வருகைக்குப் பின்னர் நிலைமை தலைகீழானது.நாளுக்குநாள் இந்திய பங்குசந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.இதற்கு காரணம்,கிரிமீயாவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் தமது முதலீட்டாளர்களை இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மறைமுகமாக எச்சரிக்கப்பட்டனர்.அதனால் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைத் திரும்ப பெற்றுக் கொண்டு வருகின்றனர்.ஆனால் இதற்கு முதலீட்டாளர்கள் தரப்பில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் டாலர் முதலீட்டு பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.ஆனால் அவர்கள் முதலீடுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்புநாடுகளால் நிர்பந்தபடுத்தபட்டுள்ளனர்.இதிலிருந்து இந்தியா சர்வதேச விவகாரங்கலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் அல்லது தமக்கு ஆதரவாக செயல்பட வேண்டுமென அமெரிக்கா எண்ணுகிறது.இதிலிருந்து விலகும்பட்சத்தில் இந்தியா அரசியல் ரீதியாக அல்லது பொருளாதார ரீதியாக கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

இந்திய இதிலிருந்து விடுபட எவ்வகையான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, December 10, 2014

பெட்ரோல் விலைக் குறைப்பின் பின்னனி - ரஷ்யாவின் பதிலடி




பெட்ரோல் விலைக்குறைப்பினால் சற்றே நிலைகுழைந்த ரஷ்யாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் முழுவீச்சில் களமிறங்கினார்.ரஷ்யாவின் பொருளாதாரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன்,அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தார்.

 ரஷ்யா-சீனா இயற்கை எரிவாயு ஒப்பந்தம்:

உக்ரைன் விவகாரத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயுவை வாங்குவதை வெகுவாகக் குறைத்துவிட்டன.இதன் காரணமாக ரஷ்ய பொருளாதாரத்தில் ஏற்ற,இறக்கம் இருந்ததே தவிர சரிவிற்க்கு செல்லவில்லை ஏனென்றால் அதன் அளப்பரிய இயற்கை எரிவாயுக்கள்.இதனால் அமெரிக்கா தனது அரேபிய அடிவருடிகளின் உதவியுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செய்ததுடன்,விலைக்குறைப்பிலும் ஈடுபட்டனர்.இதன் நோக்கமே மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயு வாங்குவதை குறைப்பதாகும்.எவ்வாறெனில் உற்பத்தியை அதிகரித்து,விலையைக் குறைக்க செய்தால் மற்ற நாடுகள் அரேபிய நாடுகளின் எண்ணெயைத் தான் வாங்க விருப்பம் தெரிவிக்கும் அதுவுமில்லாமல் ரஷ்யாவில் இயற்கை எரிவாயுவை எடுக்க ஆகும் செலவு மிக அதிகம்.குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதால் மற்ற நாடுகள் ரஷ்யாவின் இயற்கை எரிவாயு வாங்குவதை வெகுவாக குறைக்க ஆரம்பித்தன.உடனே சுதாரித்துக் கொண்ட ரஷ்யா சீனாவிடம் இயற்கை எரிவாயு ஒப்பந்தம் செய்துக் கொண்டது.அதன்படி ஆண்டிற்க்கு 30 பில்லியன் க.மீ அளவிலான இயற்கை எரிவாயுவை 30 ஆண்டுகளுக்கு சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான இயற்கை எரிவாயுவை சீனாவிற்கு உற்பத்தி செய்துக் கொடுப்பதாகும்.இதுதான் ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஒப்பந்தமாகும்.சீனாவுடனான ஒப்பந்தத்தின் மூலம் தனது இயற்கை எரிவாயுவின் விற்பனையை 30 ஆண்டுகளுக்கு உறுதிச் செய்துக் கொண்ட ரஷ்யா சரிந்துக் கொண்டிருந்த தனது பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தியது.

அமெரிக்காவிற்கு ரஷ்யாவின் பதிலடி:

தனது பொருளாதார பாதுகாப்பை கால் நூற்றாண்டுகளுக்கு உறுதி  செய்துக் கொண்ட ரஷ்யா அமெரிக்காவின் செயலுக்கு தக்க பதிலடி கொடுக்க முழுவீச்சில் இறங்கியது.பெட்ரோல் விலைக் குறைப்பினால் சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருவதை கண்டு ரஷ்ய அதிபர் புதின் கடும் எரிச்சலடைந்தார்.முதலீட்டார்கள் டாலரின் மதிப்பு குறையும்போது தங்கத்திலும்,தங்கத்தின் மதிப்பு குறையும்போது டாலரிலும் முதலீடு செய்வர்.மேலும் இவ்விரண்டில் ஏதாவது ஒன்று சர்வதேச சந்தையில் புழக்கத்தில் குறையும்போது அதன் மீது முதலீட்டாளர்கள் மிக அதிக அளவில் முதலீடு செய்வர்.தற்போது டாலரின் தேவை சந்தையில் மிக அதிக அளவில் உள்ளது ஏனென்றால் பெட்ரோல் விலைக்குறைப்பினால் அனைத்து நாடுகளும் கச்சா எண்ணெயை மிக அதிக அளவில் வாங்கி தங்கள் நாடுகளில் சேமித்து வருகின்றனர்.காரணம் பின்னாளில் எப்போது பெட்ரோல் விலை ஏறும் என்று தெரியாததால் விலை குறைவாக இருக்கும்போதே அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயை டாலரில் தான் வாங்க முடியும்.தற்போதைய பெட்ரோல் விலைக்குறைப்பினால் பெட்ரோல் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவதால் டாலரின் மதிப்பும்,அதன் தேவையும் சர்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது.டாலரின் மதிப்பை குறைத்து,முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் மீது திருப்ப புதின் மிக அதிக அளவில் சர்வதேச சந்தையிலிருந்து தங்கத்தை வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.ஏனென்றால் தங்கத்தின் புழக்கத்தைக் சர்வதேச சந்தையில் குறைத்தால் தங்கத்தின் தேவையும்,மதிப்பும் தானாகவே அதிகரித்து விடும்.அதனால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது திரும்பும் என்பது புதினின் கணக்காகும்.புதினின் இந்த நடவடிக்கையால் அதன் தாக்கம் முதலில் அமெரிக்கா உணராவிட்டாலும் பின்னாளில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.

அதோடு மட்டுமில்லாமல் சீனாவுடன் மேற்கொண்ட  இயற்கை எரிவாயு ஒப்பந்தத்தில் டாலரில் வாங்குவதை தவிர்த்துவிட்டு சீன நாட்டு கரன்சியிலே வாங்க ஒப்புதல் தெரிவித்துள்ளார்.பொதுவாக உலகில் டாலர் ரிசர்வ் கரன்சியாக பயன்படுத்தி வருகின்றனர்.சர்வதேச சந்தையில் வாங்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு டாலரில் தான் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.இதனால்தான் பெரும்பாலான நாடுகள் மற்ற நாடுகளுடன் தாங்கள் செய்யும் ஒப்பந்தங்களின் பலனாக டாலரைப் பெற்றுக் கொள்ளும்.ஆனால் புதின் இதை தகர்த்தெறிய வேண்டுமென்பதற்காகவே சீன நாட்டு கரன்சியில் இயற்கை எரிவாயு ஒப்பந்ததை மேற்கொண்டார்.புதினின் இந்த செயலால் அமெரிக்காவிற்க்கு ஆண்டுக்கு 100 கோடி டாலர் என்று 30 ஆண்டுகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.

இந்தியாவில் படிபடியாகக் குறைந்துவரும் பெட்ரோல் விலைக்கும்,மெதுவாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்வதற்கும் இந்த ரஷ்ய-அமெரிக்க மோதல்தான் காரணம்.