Friday, July 6, 2012

சவ்ரவ் கங்குலி(பெங்கால் டைகர்)-பிறந்த நாள் சிறப்புப் பகுதி



இந்திய கிரிக்கெட் அணியை உலக அரங்கில் தலைநிமிர வைத்த பெருமை நம் தாதா சவுரவ் கங்குலியைச் சாரும்.1972ஆம் வருடம் ஜுலை 8ம் தேதி கொல்கத்தாவில் பிறந்த ஒரு குழந்தை அடுத்த 30 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆட்டிப் படைக்கும் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.1992ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி கிரிக்கெட் உலகில் கங்குலி அறிமுகம ஆனார்.தான் கிரிக்கெட் விளையாடவே வந்திருக்கிறேன்.தண்ணீர் பாட்டில்களை சுமப்பதற்க்கு அல்ல என அப்போது வெளியிட்ட கருத்தால் அடுத்த 4 ஆண்டுகள் கிரிக்கெட் உலகம் அவரைப் புறக்கணித்தது. மீண்டும் 1996ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லாட்ஸில் அறிமுக டெஸ்டில் சதம் கண்டு அசத்தினார்.இவருடைய சாதனைகளையும் சிறப்புகளையும் எழுத இந்த ஒரு பகுதி போதது என்பதால் 40ஆவது பிறந்த நாளுக்கு 40 சாதனைகளும் சிறப்பம்சங்களும் இங்கே தொகுத்துள்ளேன். 

இவருடைய சாதனைகளும் சிறப்பம்சங்களும்:

1.அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர்களில் ஒருவர்.
2.ஒருநாள் போட்டியில் அதிவேக 7000,8000,9000 ரன்களை கடந்தவர்.
3.ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களை கடந்த 2ஆவது இந்திய வீரர் உலக      அரங்கில் 3ஆவது வீர்ர்.
4.ஒருநாள் போட்டியில் 22 சதங்களில் 18 அந்நிய மண்ணில் அடித்தவர்.
5.உலகின் 6ஆவது தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரர் என விஸ்டனால் புகழாரம் சூட்டப்பட்டவர்.
6.கங்குலியும்,டிராவிட்டும் இணைந்து குவித்த 318 ரன்கள் உலகக் கோப்பையில் எந்த ஒரு விக்கெட்டுக்கு இடையில் குவிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன்னாகும்.
7.ஒருநாள் போட்டியில் 10000 ரன் மற்றும் 100 விக்கெட் மற்றும் 100 கேட்ச் எடுத்த 3 வீரர்களில் ஒருவர். 





8.ஒருநாள் போட்டியில் 2 முறை 5 விக்கெட் எடுத்துள்ளார்.
9.ஒருநாள் போட்டியில் இதுவரை 190 சிக்சர்களை விளாசியுள்ளார்.
10. ஒரே உலகக் கோப்பையில் 3 சதம் அடித்த வீரர்களில் ஒருவர்.
11.உலகக் கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர்களில் ஒருவர்.
12. 31முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

13.தொடக்க ஆட்டக்காரராக கங்குலியும் சச்சினும் 26 முறை 100+ ரன்களை எடுத்துள்ளனர்.
14. தொடக்க ஆட்டக்காரராக கங்குலியும் சச்சினும் அதிக ரன்களை குவித்துள்ளனர்.
15.சச்சின் மற்றும் டிராவிட்டுடன் இணைந்து 5 முறை 200+ ரன்களை குவித்துள்ளார்.
16.கங்குலி சதமடித்த எந்தவொரு டெஸ்ட் போட்டியையும் இந்தியா தோற்றதில்லை.

17.1997,1999,2000 ஆகிய வருடங்களில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்தவர்.
18.ஐ.சி.சியின் ஒருநாள் போட்டிக்கான தரம் பெற்ற அனைத்து நாடுகளுடனும்(வெஸ்ட் இண்டீஸ் தவிர) சதம் அடித்துள்ளார்.
19.ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார்.


20.டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் இதுவரை 38 சதம் அடித்துள்ளார்.
21.முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 3 வீரர்களில் ஒருவர்.
22.2000ஆம் ஆண்டு அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபோது பல வீரர்கள் அனுபவமில்லாமலும்,புதுமுகமாகவும் இருந்தனர்.
23.சேவாக்,யுவ்ராஜ்,ஜாகீர்கான் ம்ற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இவரால் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.
24.இவருடைய தலைமையின் கீழ் இந்திய அணி ஆஸ்திரேலியாவின் 16 டெஸ்ட் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
25.2000 ம்ற்றும் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.சி.சி டிராபியின் இறுதிப்போட்டிவரை அணியை அழைத்து சென்றார்.
26.இவருடைய தலைமையின் கீழ் 2000-01ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்க்கு எதிராக கொல்கத்தாவில் பெற்ற வெற்றி இன்றுவரை உலகின் தலைசிறந்த டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
27.2002ஆம் ஆண்டு லாட்ஸில் நடைபெற்ற நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதிப்போட்டியின் வெற்றிக்களிப்பில் தனது டி-சர்ட்டை கழற்றி ரசிகர்களை  நோக்கி எறிந்ததை எந்த இந்திய ரசிகனும் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டான்.
28.2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.


29.நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2004ஆம் ஆண்டு  பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இவரின் தலைமையின் இந்திய அணி வென்றது.
30.கேப்டனாக 49 டெஸ்ட் போட்டியில் 21 போட்டியில் அணிக்கு வெற்றி தேடித்தந்து தன்னை உலகின் தலைசிறந்த டெஸ்ட் கேப்டனாக முத்திரை பதித்து கொண்டார்.
31.அதிக அனுபவம் மற்றும் வெற்றிகரமான கேப்டன்களில் இவரும் ஒருவர்.
32.இவருடைய தலைமையின் கீழ் இந்திய அணியை ஒரு துடிப்புமிக்க போர்ப்படையைப்  போல எதிரணியினர் கருதினர்.  
33களத்தில் எப்போது துடிப்புள்ள வீரராக செயல்படுவார்.
34.அதிரடி ஆட்டக்காரர் யுவ்ராஜ்சிங் "கங்குலி தலைமையின் கீழ் தான் சாகவும் தயார்"என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
35."மீண்டும் எழுந்து வருதல்"(come back) என்ற இவருடைய எழுச்சி பல வீரர்களுக்கு முன் உதாரணம். 


36."இளம் வீரர்களுக்கு தொடர்ச்சியாக ஐந்து அல்லது அத்ற்கு மேலே வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே அவர்கள் தங்களை நிரூபித்துக் கொள்ள முடியும்"என்ற கூற்றில் உறுதியாக உள்ளவர்.
37."கிரிக்கெட்டின் ஆப்-சைடின்(off-side)கடவுள்" என்று இவர் வர்ணிக்கப்படுகிறார்.எத்தனை வீரர்களை ஆப்-சைடில் நிற்க வைத்தாலும் அவர்களை தாண்டி எல்லைக்கோட்டுக்கு வெளியே பந்தை அனுப்புவதில் அவருக்கு நிகர் அவரே.
38.இவரை ரசிகர்கள் செல்லமாக "கிரிக்கெட்டின் தாதா" என்று அழைப்பார்கள்.
39.இவரின் செல்லப்பெயர்கள்
     *.கொல்கத்தாவின் இளவரசர்
     *.கிரிக்கெட்டின் மஹாராஜா
     *.பெங்கால் டைகர்
     *.எழுவதில் மன்னன்(king of come back)
     *.இந்திய கிரிக்கெட்டின் வழி
40. 2004 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அப்துல்கலாம் அவர்களால் வழங்கப்பட்டது.




சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றறாலும் என்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.வாழ்க தாதா பல்லாண்டு..




                                                                       Love you DADA
                                                                                                        
                                                                               Vels