Sunday, March 1, 2015

ஒபாமாவின் மதச்சுதந்திரம் தொடர்பான பேச்சுக்கு காரணம்-2



இந்தியா விதிக்கும் சில நிபந்தனைகளில் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு யார் வழங்குவது.ஏனென்றால் போபால் விஷவாயு கசிவில் அதன் அப்போதைய நிர்வாகி வாரன் ஆண்டர்சன் சில அரசியல் தலைவர்கள் உதவியுடன் இந்தியாவிலிருந்து தப்பியது இந்திய நாட்டு மக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் விபத்து மற்றும் இழப்பீடு விவகாரங்களில் இந்தியா மிக கவனமாகக் கையாள வேண்டியுள்ளது.ஆனால் இவ்விவகாரத்தில் அமெரிக்காவும் முரண்டு பிடிப்பதால் அணு ஒப்பந்தம் கால தாமதமாகிக் கொண்டே வந்தது.இதற்கிடையில் ரஷ்யா,பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு அணு ஆராய்ச்சியில் தரும் ஒத்துழைப்பை மேலும் பல மடங்கு அதிகரித்ததுடன் முதலீடுகளையும் அதிகரித்துள்ளனர்.இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.ஏனென்றால் தான் கணக்கு போட்டு வைத்துள்ள 100 பில்லியன் டாலர் வர்த்தகத்திற்கு பங்கு வந்துவிடுமோ என்று அமெரிக்கா அஞ்சுகிறது.கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வந்தார்.இந்தியாவுடன் 10-க்கும் மேற்பட்ட அணு உலைகள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டார்.இந்த ஒப்பந்தத்தினால் அமெரிக்கா தன்னுடைய அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.இதனால்தான் ஒபாமா இந்திய பயணத்திற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்.

ஒபாமாவின் மறைமுக நெருக்கடி:


இந்திய பயணத்தில் அணு ஒப்பந்தம் முடிவு எட்ட படாததால் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்த ஒபாமா.இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டுமென தீர்மானித்தார்.தற்போதைய இந்திய அரசிற்கு மத அடிப்படையிலான நெருக்கடி கொடுத்தால் மட்டுமே விரைந்து முடிக்க முடியுமென்று ஒபாமா இந்தியப் பயணத்தின்போது தனது பேச்சில் மத அடிப்படையில் பிளவுகள் ஏற்படாதவரை இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்று கூறினார்.உடனே இந்தியாவிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் மற்ற நாட்டின் தலைவர் வந்து நமது நாட்டின் மத ஒற்றுமையை பற்றி பேசும் அளவிற்கு நமது நாட்டின் நிலைமை உள்ளது என்று பெரிய பிரச்சினை உண்டு பண்ணினர்.இதுபோதாதென்று அமெரிக்க செனட் சபையில் குடியரசு கட்சியைச் சார்ந்த எம்.பி ஜோ.பிட்ஸ் ஆற்றிய உரையில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க பன்மைத்துவம் தற்போது சகிப்புத்தன்மையின்மை,பிரிவினை,பெரும்பான்மைத்துவத்தால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.மேலும் சிறுபான்மையினத்தவரின் மீது தாக்குதல் அதிகரித்து இருப்பதாக கூறினார்.இதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஒபாமா கூறுகையில் தற்போதைய இந்தியாவில் சமய சகிப்புத்தன்மையை பார்த்தால் காந்தி கூட அதிர்ச்சியடைந்து இருப்பார் என்று கூறினார்.இவ்வாறாக தொடர்ச்சியாக மத அடிப்படையிலான விஷயத்தை திரும்பத்திரும்ப கூறி வந்ததை புரிந்து கொண்ட இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் அரசாங்கம் வேறு ஒரு காரணத்திற்காக தொடர்ச்சியாக நெருக்கடி சந்தித்து வருகிறது என்று அவ்விஷயத்தை விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர்.


எதிர்காலத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான தடை:


முதலாவது அணுசக்தி விவகாரம் என்றாலும்,இரண்டாவது காரணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான எதிர்கால நடவடிக்கை.ஏனென்றால் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிருந்து நிதி உதவியைப் பெற்றுக் கொண்டு மறைமுகமாக நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பதாகும்.அவர்களுக்கு அதிக நிதி உதவியை அளிப்பது அமெரிக்கா,பிரான்ஸ்.அமெரிக்கா எப்போதுமே ஒரு கையை குலுக்கிக் கொண்டு மறுகையில் கீழே தள்ளி விடுவது கை வந்த கலை.தனக்கு சாதகமான அரசிற்கு எதிரான போராட்டங்களை நடத்த இத்தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது.அமெரிக்காவிடம் நிதி உதவியை பெற்று கேரள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை திறக்க விடாமல் பல போராட்டங்களை நடத்தியது நாடறிந்ததே.கூடங்குளம் விவகாரத்தில் விழித்துக் கொண்ட மத்திய அரசு இதேபோன்று பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாதென்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கணக்குகளை ஆராய ஆரம்பித்ததுடன் மறைமுகமாக அவர்களின் நடவடிக்கைகளைக் கவனித்த மத்திய அரசு கிட்டத்தட்ட 180க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறி தடை செய்ய ஆய்வு செய்து வருகிறது.இவ்விஷயம் அமெரிக்காவுக்கு எட்ட அதன் பின்னரே எம்.பி ஜோ.பிட்ஸ்,அதிபர் ஒபாமா ஆகியோர் மறைமுக எச்சரிக்கையாக மத விவகாரங்களைப் பற்றி பேசினர்.
கிடைக்கும்போதெல்லாம் மத விவகாரம்,மத்திய அரசை ஐ.நா சபையின் மூலம் விமர்சிப்பது என்று அமெரிக்கா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துக் கொண்டே வருகிறது.இத்தகைய விவகாரங்களை திறம்பட சமாளித்தால் மட்டுமே எதிர்காலத்தில் வல்லரசுக் கனவிற்கு வலுவான அடித்தளம் அமைக்க முடியும்.

No comments:

Post a Comment